sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாகாளியம்மன் கோவிலில் மறுபூஜை விழா

/

மாகாளியம்மன் கோவிலில் மறுபூஜை விழா

மாகாளியம்மன் கோவிலில் மறுபூஜை விழா

மாகாளியம்மன் கோவிலில் மறுபூஜை விழா


ADDED : ஜூன் 11, 2024 11:12 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:காரமடை சாலையில் உள்ள உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில், மறுபூஜை விழா நடந்தது. மேட்டுப்பாளையம் காரமடை சாலை சுதந்திராபுரத்தில், உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலின், 38ம் ஆண்டு விழா, குண்டம் விழா பூச்சாட்டு கடந்த மாதம், 21ம் தேதி நடந்தது. 28ம் தேதி அம்மனுக்கு கம்பம் நடப்பட்டது. இம்மாதம் 4ம் தேதி பவானி ஆற்றில் இருந்து, அம்மன் சுவாமி அழைத்து வந்தனர். ஐந்தாம் தேதி நடந்த குண்டம் விழாவில், ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து மாலையில் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுக்கப்பட்டது. ஆறாம் தேதி அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏழாம் தேதி மஞ்சள் நீராட்டும், மகா அபிஷேகமும் நடந்தது.

குண்டம் திருவிழா நிறைவடைந்ததை அடுத்து, நேற்று மறுபூஜையும், அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us