sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தானமாக பெற்ற நிலத்துக்கு தார்சாலை அமைக்க கோரிக்கை

/

தானமாக பெற்ற நிலத்துக்கு தார்சாலை அமைக்க கோரிக்கை

தானமாக பெற்ற நிலத்துக்கு தார்சாலை அமைக்க கோரிக்கை

தானமாக பெற்ற நிலத்துக்கு தார்சாலை அமைக்க கோரிக்கை


ADDED : பிப் 21, 2025 11:34 PM

Google News

ADDED : பிப் 21, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தனியார் நிலத்தின் வழியாக இணைப்புச்சாலை அமைக்க, தான செட்டில்மென்ட் பெற்ற சீரபாளையம் ஊராட்சி நிர்வாகம், முழுமையாக சாலையை அமைத்துக்கொடுக்காமல் இழுத்தடிப்பது, விவசாயிகளை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

மதுக்கரை தாலுகா, சீரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அரிசிபாளையம் கிராமத்தில் உள்ள, விவசாயிகளுக்கு சொந்தமான, 585, 586, 587, 588 ஆகிய நான்கு சர்வே எண்களை கொண்ட தனி பட்டா நிலத்தில், தார்சாலை அமைக்க, அரிசிபாளையம் கிராம ஊராட்சி நிர்வாகம், தான பத்திரம் பதிவு செய்து தருமாறு கோரினர்.

ஆனால் ஊராட்சிக்கான கூட்டுப்பாதை, மற்றும் கூட்டு அனுபவம் என்றே, வருவாய்த்துறை ஆவணங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இருப்பினும், வருவாய்த்துறை அதிகாரிகளின் வற்புறுத்தலின் காரணமாக, மேற்குறிப்பிட்ட சர்வே எண்களை கொண்ட, நிலத்தின் உரிமையாளர்கள் சீரபாளையம் ஊராட்சிக்கு, தானசெட்டில்மென்ட் செய்து கொடுத்தனர்.

அதன் அடிப்படையில், ஊராட்சி நிர்வாகம் ஒரு பகுதியை மட்டும் சாலையாக செப்பனிட்டு தார்சாலை அமைத்துள்ளது. மீதமுள்ள பகுதிகளை கிடப்பில் போட்டுவிட்டது.

இதனால், தானமாக நிலம் கொடுத்த விவசாயிகள், தங்களது நிலத்தையும் இழந்து இணைப்பு சாலையும் இல்லாமல், போக்குவரத்து பயன்பாட்டிற்கு சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அதனால், மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலரும், மதுக்கரை தாலுகா தாசில்தாரும் இணைந்து கள ஆய்வு செய்து, இணைப்பு சாலையை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us