sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்க வேண்டுகோள்

/

ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்க வேண்டுகோள்

ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்க வேண்டுகோள்

ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்க வேண்டுகோள்


ADDED : மார் 05, 2025 03:33 AM

Google News

ADDED : மார் 05, 2025 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவையில், உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக, 3,000 ரூபாய்- வழங்க கோரி, தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில், கலெக்டர் அலுவலகம் எதிரில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த, ஏ.ஐ.டி.யு.சி., மாநிலச் செயலாளர் ஆறுமுகம், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:

தமிழக அரசு, உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக, 3,000 ரூபாய் வழங்க வேண்டும். மகளிர் உதவித்தொகை பெறுவதை காரணம் காட்டி, ஓய்வூதியம் வழங்குவதை தடுக்கக்கூடாது.

வீட்டு மனை உள்ள தொழிலாளர்களுக்கு, வீடு கட்ட ஐந்து லட்சம் ரூபாய் மானியம் வழங்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

சங்கத்தின் -மாவட்ட கவுன்சில் பொதுச் செயலாளர் தங்கவேல், ஏ.ஐ.டி.யு.சி., கட்டடத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ், மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us