sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

/

முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை


ADDED : ஆக 22, 2024 02:26 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : பழநியில் நடக்கும், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு, சிறப்பு ரயில்கள் இயக்க, ரயில் நல பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முருகப் பெருமானின் பெருமையை, உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை, இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது. இதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் கோவை, தஞ்சாவூர், மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே, சேலம் கோட்ட மேலாளருக்கு ரயில் நல பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில் நல பயணிகள் சங்கம் (கோவை, திருப்பூர், திண்டுக்கல்) மாவட்டங்களின் ஒருங்கிணைந்த செயலாளர் மோகன் கூறுகையில், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக பழனிக்கும், தஞ்சாவூரில் இருந்து திருச்சி வழியாக பழனிக்கும், மதுரையில் இருந்து திண்டுக்கல் வழியாக பழனிக்கும் ரயில் இயக்க வேண்டும். பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் இந்த சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.

மேட்டுப்பாளையம், அன்னூர் போன்ற பல்வேறு புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பழநிக்கு வருவார்கள். அவர்களுக்கு கோவையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில் பயன் உள்ளதாக இருக்கும், என்றார்.--






      Dinamalar
      Follow us