/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியாக வாரியம் அமைக்க கோரிக்கை
/
தனியாக வாரியம் அமைக்க கோரிக்கை
ADDED : செப் 01, 2024 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;நில வணிக தொழில் முனைவோர் நலச் சங்கம் சார்பில், கோவை புலியகுளத்தில் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், உழைப்பிற்கு எந்த விதமான அங்கீகாரமும் இல்லாமல், தொழில் செய்து வரும் இடைதரகர்களுக்கு, அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க வேண்டும், இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை 2 சதவீதமாக இருந்த கமிஷனை, இனி வரும் காலங்களில் 3 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், இந்த தொழிலுக்கு தனி வாரியத்தை அமைத்திட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தலைவர் கருணாகரன், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.