sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓய்வு பெற்றோர் அமைப்பு; கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

ஓய்வு பெற்றோர் அமைப்பு; கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்றோர் அமைப்பு; கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்றோர் அமைப்பு; கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 21, 2024 01:00 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மின்வாரிய ஓய்வூதியர் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 2024 ஜன., 1 முதல், 2024 மே 31 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 4 சதவீத அகவிலைப்படி நிலுவை தொகை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தின் படி, காப்பீட்டு நிறுவனத்திடம் மருத்துவ செலவினங்களை முழுமையாக பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோவை மண்டலம் சார்பில், கோவை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலக நுழைவு வாயில் முன், காலை 10:00 மணிக்கு துவங்கிய ஆர்ப்பாட்டத்துக்கு, கோவை கிளை தலைவர் ஞானப்பிரகாசம் தலைமை வகித்தார்.

செயலாளர் விவேகானந்தன், கோவை மண்டல செயலாளர் சுந்தரேசன், இணை செயலாளர் மீனாட்சி சுந்தரம், உட்பட பலர் பங்கேற்று பேசினர்.






      Dinamalar
      Follow us