sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ.1 கோடி மோசடி முன்ஜாமின் 'டிஸ்மிஸ்'

/

ரூ.1 கோடி மோசடி முன்ஜாமின் 'டிஸ்மிஸ்'

ரூ.1 கோடி மோசடி முன்ஜாமின் 'டிஸ்மிஸ்'

ரூ.1 கோடி மோசடி முன்ஜாமின் 'டிஸ்மிஸ்'


ADDED : ஆக 03, 2024 10:02 PM

Google News

ADDED : ஆக 03, 2024 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஒரு கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்த நபரின் முன்ஜாமின் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.

பல்லடம் அருகேயுள்ள குப்புசாமி நாயுடுபுரத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவரது நண்பரான, சித்தநாயக்கன் பாளையத்தில் வசிக்கும் பிரதீப்குமாரை, அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். இந்நிலையில், பிரதீப்குமாரும் இவரது நண்பர் ஆர்.எஸ்.புரம் விஜயகுமாரும் சேர்ந்து, கவுண்டம்பாளையம், கனரா வங்கியில், துரைராஜ் சொத்துக்களை அடமானம் வைத்து, ரூ.1.95 கோடி கடன் பெற்று கொடுத்தனர்.

இந்த தொகையில், ஒரு கோடி ரூபாயை கடனாக தரும்படி பிரதீப்குமார், விஜயகுமார் கேட்டனர். வங்கியில் கடனை திருப்பி செலுத்தும் போது, வட்டியுடன் சேர்த்து தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பி இருவருக்கும் ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்.

ஆனால், பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்தனர். மாநகர குற்றப்பிரிவு போலீசில், புகார் அளித்ததை தொடர்ந்து, இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், முன்ஜாமின் கோரி, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் பிரதீப்குமார் மனு தாக்கல் செய்தார். மனு 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us