sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி

/

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி


ADDED : பிப் 21, 2025 11:15 PM

Google News

ADDED : பிப் 21, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக, ரூ.12 லட்சம் ஏமாற்றியதாக, குவைத்தில் உள்ள காரமடையை சேர்ந்த செவிலியர் அளித்த புகார் தொடர்பாக, காரமடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரமடையை சேர்ந்தவர் அனிதா. இவர் தற்போது குவைத் நாட்டில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவரது குடும்பத்திற்கு ஒருவர் அறிமுகமானார். மத்திய அரசு வேலை வாங்கித் தர முடியும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, ரூ.12 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளனர்.

பல மாதங்கள் ஆகியும் அரசு வேலை வாங்கி தராததால், அனிதா பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, குவைத்தில் இருந்தவாறே, இந்தியாவில் உள்ள என்.ஆர்.ஐ., செல்லுக்கு அனிதா புகார் மனு அனுப்பினார். தற்போது இதுதொடர்பாக காரமடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.--






      Dinamalar
      Follow us