/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ. 250 கோடி நிலம் போலி பத்திரப்பதிவு: மூவர் 'சஸ்பெண்ட்'
/
ரூ. 250 கோடி நிலம் போலி பத்திரப்பதிவு: மூவர் 'சஸ்பெண்ட்'
ரூ. 250 கோடி நிலம் போலி பத்திரப்பதிவு: மூவர் 'சஸ்பெண்ட்'
ரூ. 250 கோடி நிலம் போலி பத்திரப்பதிவு: மூவர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 16, 2024 01:35 AM
திருப்போரூர்:கன்னிவாக்கம் கிராமத்தில், தனியார் நிறுவன கட்டுப்பாட்டில், 25.91 ஏக்கர் நிலம் உள்ளது.
இதில், 5.23 ஏக்கர் நிலம் தொடர்பான அசல் ஆவணங்களை உறுதிப்படுத்துவது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.
கடந்த மே மாதம், இந்நிறுவனத்தின் பெயரில் இருந்து பொது அதிகாரம் பெற்றதாக போலி ஆவணம் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில், 250 கோடி ரூபாய் மதிப்பிலான, 5.23 ஏக்கர் நிலம், ஐந்து பத்திரங்களாக வேறு பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்போரூர் சார்- பதிவாளர் கணேசன், தலைமை எழுத்தர் சக்திபிரகாஷ், ஜூனியர் உதவியாளர் சதீஷ்குமார் ஆகியோர் மோசடிக்கு உடந்தையாக இருந்தது உறுதியானது.
இதையடுத்து, பதிவுத்துறை ஐ.ஜி., ஆலிவர் பொன்ராஜ், மூவரையும், நேற்று 'சஸ்பெண்ட்' செய்தார்.