sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொழில்முனைவோரை கைதுாக்கி விட திட்ட அறிக்கைகளுக்கு ரூ.45 கோடி மானியம்

/

தொழில்முனைவோரை கைதுாக்கி விட திட்ட அறிக்கைகளுக்கு ரூ.45 கோடி மானியம்

தொழில்முனைவோரை கைதுாக்கி விட திட்ட அறிக்கைகளுக்கு ரூ.45 கோடி மானியம்

தொழில்முனைவோரை கைதுாக்கி விட திட்ட அறிக்கைகளுக்கு ரூ.45 கோடி மானியம்


ADDED : ஜூன் 20, 2024 04:46 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, : கோவை மாவட்ட தொழில் மையம் மூலமாக, தொழில் முனைவோர் சமர்ப்பித்த திட்ட அறிக்கைகளுக்கு, 45.09 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் புதிய தொழில்முனைவோருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கப்படுகிறது. முதல் தலைமுறை தொழில்முனைவோரின் தொழில் முயற்சிக்கு கை கொடுக்கவும், ஊக்கமளிக்கவும் 'நீட்ஸ்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உற்பத்தி மற்றும் சேவை தொழில் நிறுவனங்களுக்கு, ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான திட்டத்தொகையில், 25 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக, 75 லட்சம் ரூபாய் வரை மானியம் தரப்படுகிறது.

இத்திட்டத்தில் கோவை மாவட்டத்தில், ரூ.49.63 கோடிக்கு, 38 திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதற்கு, ரூ.11.95 கோடி மானியம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல், வேலைவாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தில், 9 கோடி ரூபாய் கேட்டு, 177 திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதற்கு, 2 கோடியே, 24 லட்சத்து, 73 ஆயிரம் ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், ரூ.59.66 கோடிக்கு, 475 திட்ட அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 16 கோடியே, 14 லட்சத்து, 82 ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் வணிக முன்னோடி திட்டத்தில், ரூ.31.68 கோடிக்கு, 77 திட்ட அறிக்கைகள் வழங்கப்பட்டன.

இவை பரிசீலிக்கப்பட்டு, ஒன்பது கோடியே, 44 லட்சத்து, 66 ஆயிரம் ரூபாய் மானியமாக விடுக்கப்பட்டுள்ளது.

களில் கடன்'

மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முக சிவா கூறுகையில், ''தொழில்முனைவோருக்கு ஐந்து திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டு, மத்திய - மாநில அரசுகளால் மானியம் விடுவிக்கப்படுகிறது. மானியமாக ரூ.20.24 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருந்தாலும், 165.26 கோடி ரூபாய் மதிப்புக்கு, 913 திட்ட அறிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டன. இலக்கை கடந்து, ரூ.45.09 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.








      Dinamalar
      Follow us