sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ.200 கோடி பொது ஒதுக்கீட்டு இடம் மீட்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

/

ரூ.200 கோடி பொது ஒதுக்கீட்டு இடம் மீட்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ரூ.200 கோடி பொது ஒதுக்கீட்டு இடம் மீட்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ரூ.200 கோடி பொது ஒதுக்கீட்டு இடம் மீட்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


ADDED : ஜூலை 29, 2024 10:27 PM

Google News

ADDED : ஜூலை 29, 2024 10:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.200 கோடி மதிப்பிலான பொது ஒதுக்கீட்டு இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.கோவை சரவணம்பட்டி கீரணத்தம் பிரிவு அருகே, தனியார் நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

இதற்காக, 105.03 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மாநகராட்சியில் கடந்த, 2008 ம் ஆண்டு அனுமதியும் வழங்கப்பட்டது. இதற்காக விதிப்படி, பொது ஒதுக்கீட்டு இடமாக, 10.5 ஏக்கர் நிலம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.இதன்படி, குடியிருப்புகள் வளாகத்துக்குள் ஏழு இடங்களில் பொது ஒதுக்கீட்டு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், நாளடைவில் இந்த இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன. இதுகுறித்து தனியார் நிர்வாகத்துக்கு மாநகராட்சி சார்பில், பல்வேறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.இந்நிலையில், நேற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த, 10.5 ஏக்கர் நிலத்தை மீட்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி வடக்கு மண்டல உதவி நகரமைப்பு பிரிவு அலுவலர் சத்யா, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்பதை தெரிவிக்கும் வகையில் பலகைகள் நடப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,'கடந்த, 2008 ம் ஆண்டு, இந்த இடம் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது. பொது ஒதுக்கீட்டுக்காக கொடுக்கப்பட்ட இந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அது அகற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.200 கோடியாகும்' என்றனர்.






      Dinamalar
      Follow us