/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரான்ஸ்பார்மரை சுற்றி பாதுகாப்பு வேலி: பொதுமக்கள் வலியுறுத்தல்
/
டிரான்ஸ்பார்மரை சுற்றி பாதுகாப்பு வேலி: பொதுமக்கள் வலியுறுத்தல்
டிரான்ஸ்பார்மரை சுற்றி பாதுகாப்பு வேலி: பொதுமக்கள் வலியுறுத்தல்
டிரான்ஸ்பார்மரை சுற்றி பாதுகாப்பு வேலி: பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 16, 2024 11:17 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி நகரில், வீடுகள் மற்றும் வணிகக் கடைகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதற்கேற்ப, மின்சாரம் சார்ந்த பயன்பாடுகளும், தேவைகளும் அதிகரித்து வருகின்றன.
அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவது, குறைந்த மின்னழுத்தத்தால் விளக்குகள் எரியாமல் இருப்பது போன்ற பிரச்னை ஏற்படுவதை தடுக்க, ஆங்காங்கே டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நகரில் அமைக்கப்பட்டுள்ள பல டிரான்ஸ்பார்மர்கள் அருகே, குப்பை கொட்டுவதை சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இது ஒருபுறமிருக்க, டிரான்ஸ்பார்மர் அருகில் வெல்டிங், பழைய பொருட்கள் விற்பனை என, ஆபத்தான தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இதனால், அவ்வபோது, பராமரிப்பு பணிக்காகச் செல்லும் மின்வாரிய ஊழியர்கள் திணறுகின்றனர். தற்போது, பகலில் கடும் வெயில் நிலவுவதால், ஏதேனும் வகையில் தீ பரவினால், டிரான்ஸ்பார்மர் பாதிப்படையும்.
எனவே, டிரான்ஸ்பார்மரை ஒட்டி ஆபத்தான தொழில் நிறுவனங்கள் செயல்படுவதைக் கண்டறிந்து தடுக்கவும், குப்பை கொட்டுவதை தவிர்க்கவும் நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் கூறுகையில், 'சில பகுதிகளில், டிரான்ஸ்பார்மர் ஒட்டி, குப்பை உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுகிறது. இதேபோல, டிரான்ஸ்பார்மர் மற்றும் சாலையோர மின் இணைப்பு பெட்டிகள் அருகில், ஆபத்தான தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
டிரான்ஸ்பார்மரை ஒட்டி பாதுகாப்பு வேலி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

