/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இ - நாம்' திட்டம் வாயிலாக விளை பொருட்கள் விற்பனை
/
'இ - நாம்' திட்டம் வாயிலாக விளை பொருட்கள் விற்பனை
ADDED : ஆக 28, 2024 11:53 PM
கிணத்துக்கடவு,: கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 'இ-நாம்' திட்டத்தில், 78 லட்சம் ரூபாய்க்கு விளை பொருட்கள் விற்பனையானது.
கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கிணத்துக்கடவு சுற்று வட்டார விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இருப்பு வைத்து, விலை உயரும் போது விற்பனை செய்து வருகின்றனர்.
இதில், தற்போது 'இ - நாம்' திட்டத்தின் வாயிலாக, 1,125 மெட்ரிக் டன் அளவு தேங்காய், கொப்பரை மற்றும் மரவள்ளி ஆகிய விளை பொருட்கள், 78 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், 176 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
விற்பனை கூடத்தின் வாயிலாக, 10 விவசாயிகளுக்கு, 50 லட்சம் ரூபாய் பொருளீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், டபிள்யு.டி.ஆர்.ஏ., கிடங்கில் விளை பொருட்களை இருப்பு வைத்துள்ள வியாபாரிகளுக்கு, இ.என்.டபிள்யு., ரசீது வாயிலாக, வங்கிகளில் இருந்து, 1.32 கோடி ரூபாய் கடன் பெற்று தரப்பட்டுள்ளது. இத்தகவலை, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.