sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இளநீர் விற்பனை படுஜோர்

/

இளநீர் விற்பனை படுஜோர்

இளநீர் விற்பனை படுஜோர்

இளநீர் விற்பனை படுஜோர்


ADDED : பிப் 24, 2025 11:01 PM

Google News

ADDED : பிப் 24, 2025 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம், ; சுட்டெரிக்கும் வெயிலால் மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் இளநீர் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பகல் நேரங்களில் குறிப்பாக மதிய நேரத்தில் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இருப்பினும் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வந்து செல்கின்றனர்.

வெயிலை தணிக்க பொதுமக்கள் சாலையோர இளநீர் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இளநீர் ஒன்று ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் காலங்களில் இளநீர் விலை மேலும் உயரும், தட்டுப்பாடு ஏற்படும் என இளநீர் வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us