sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தனியார் கிணறுகளில் நீர் எடுத்து விற்பனை! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மறியல்

/

தனியார் கிணறுகளில் நீர் எடுத்து விற்பனை! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மறியல்

தனியார் கிணறுகளில் நீர் எடுத்து விற்பனை! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மறியல்

தனியார் கிணறுகளில் நீர் எடுத்து விற்பனை! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மறியல்


ADDED : ஏப் 27, 2024 12:24 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், தனியார் கிணற்றில் இருந்து, விற்பனைக்காக அதிகளவு நீர் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி நகரில், குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் கிணறுகளில் இருந்து, அதிகளவு நீர் எடுத்து விற்பனைக்கு கொண்டு செல்வதால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். புகார்கள் எழுந்தாலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி, கோட்டூர் ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி மக்கள், நேற்று மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்துறை அதிகாரிகள், போலீசார் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.

பொதுமக்கள் கூறியதாவது:

பொள்ளாச்சி நகராட்சி, 33வது வார்டுக்கு உட்பட்ட கோட்டூர் ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி மற்றும் மருதமலை ஆண்டவர் லே-அவுட் பகுதியில், தனியார் கிணறுகளில் இருந்து வணிக நோக்கத்தோடு நாளொன்றுக்கு, 25 லோடுகளுக்கு மேலாக கனரக டேங்கர் லாரிகளில் விற்பனைக்காக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதனால், அப்பகுதியில் உள்ள பொதுக்கிணறுகள், வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இது மட்டுமல்லாமல் எவ்வித அனுமதியும் பெறாமல், இரவு, பகலாக நீரேற்றிச் செல்லும் வாகனங்களனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது; ரோடும் பழுது ஏற்படுகிறது.

தனியார் கிணறுகளில் நீர் எடுத்து விற்பதால், 33, 34,35 மற்றும், 36வது வார்டுகளில் வசிக்கும், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நீர் வழங்கும் நகராட்சி பொதுக்கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, மக்கள் கூறினர்.

இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். போராட்டத்துக்கு பின் நீர் எடுத்துச் சென்ற லாரியை மக்கள் தடுத்து நிறுத்தினர். லாரி டேங்கரில் இருந்து நீரை, கிணற்றுக்குள் விட்ட பின், லாரியை அனுப்பினர்.

நகரில் தண்ணீர் தட்டுப்பாடு!

பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:நகராட்சி, 25 மற்றும், 31வது வார்டுகளில், மூன்று இடங்களில் தனியார் ஆழ்துளை கிணறு அமைத்து வணிக நோக்கத்தோடு நாளொன்றுக்கு, 100 லோடுகள் தண்ணீர் லாரிகள் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.இதனால், அருகில் உள்ள பொதுக்கிணறுகள், வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால், 1,500 குடும்பங்களின் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.மரப்பேட்டை வீதி, பள்ளம், விநாயகர் கோவில் வீதி பள்ளம், தந்தை பெரியார் வீதி, தன்னாசியப்பன் கோவில் வீதி, பொட்டு மேடு பள்ளம் மற்றும், 25வது வார்டுக்கு உட்பட்ட பவானிசங்கர் ராவ் வீதி, வெங்கிட்டு வீதி, ராஜாஜி வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகள், நந்தனார் காலனி உள்ளிட்ட பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.எவ்வித அனுமதியும் பெறாமல், சட்ட விரோதமாக போர்வெல்கள் அமைத்து, நீர் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலத்தில் இதுபோன்று செய்வதால், நகரில் நீர் தட்டுப்பாடு ஏற்படும். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.








      Dinamalar
      Follow us