sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுவாணி நீர்மட்டம் 31.45 அடியாக உயர்வு

/

சிறுவாணி நீர்மட்டம் 31.45 அடியாக உயர்வு

சிறுவாணி நீர்மட்டம் 31.45 அடியாக உயர்வு

சிறுவாணி நீர்மட்டம் 31.45 அடியாக உயர்வு


ADDED : ஜூலை 15, 2024 11:49 PM

Google News

ADDED : ஜூலை 15, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பெய்து வரும் தொடர் மழையால், சிறுவாணி அணையின் நீர் மட்டம், 31.45 அடியாக (மொத்த உயரம் - 50 அடி) உயர்ந்திருக்கிறது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், சில நாட்களாக மழைப்பொழிவு காணப்படுகிறது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 44 மி.மீ., அடிவாரத்தில் 18 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.

குடிநீர் தேவைக்காக, 6 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகராட்சி மற்றும் வழியோர பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. 31.45 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருந்தது. மழை தொடர்ந்து பெய்து வருவதால், நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

அதேநேரம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பதிவாகியிருக்கிறது. சின்னக்கல்லார் - 127, வால்பாறை - 94, சோலையாறு - 76, சின்கோனா - 52, மாக்கினாம்பட்டி - 26, ஆழியார் - 20.20, பொள்ளாச்சி - 19.40 மி.மீ., மழை பதிவானது. மேட்டுப்பாளையம், பில்லுார் அணை, கோவை தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் லேசான மழையே பதிவாகியிருக்கிறது.






      Dinamalar
      Follow us