/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் அரிசி கடத்தல் : கார் , ஆட்டோக்கள் பறிமுதல்
/
ரேஷன் அரிசி கடத்தல் : கார் , ஆட்டோக்கள் பறிமுதல்
ADDED : செப் 11, 2024 07:16 PM
கோவை: ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கார்,ஆட்டோக்கள் மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவுபடி கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சந்திரசேகர்மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் கோவை சுந்தராபுரம்- மதுக்கரை மார்க்கெட் ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த அபே ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 1050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ஆட்டோவை ஓட்டி வந்த கோவை மாச்சநாயக்கன்பாளையம் ஜனார்த்தனன் (40) ஆட்டோ மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளின் உரிமையாளர் சுந்தராபுரம் முத்தையா நகரை சேர்ந்த இமய நாதன்(44) என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
மேலும் கோவை-பாலக்காடு மெயின் ரோடு மதுக்கரை மார்க்கெட் மிலிட்டரி கேம்ப் அருகில் அத்யாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக கண்காணிக்க சென்ற போது ஆட்டோவில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை மாருதி ஆம்னி காரில் சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசியை ஏற்றிக் கொண்டிருந்த கேரள மாநிலம் வேலந்தாவளம் சுண்ணாம்புக்கல் தோடு அமல்லூர் பவம் (30) மற்றும் கோயம்புத்தூர் பீளமேடு லோகேஷ் (27) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்த போது பீளமேடு, காந்திபுரம் பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரள மாநிலம் கஞ்சிக்கோடு முகமது என்பவர் மகன் ஜாகிர் உசேன் (45) என்பவருக்கு கள்ளச் சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இரண்டு வழக்குகளில் மூன்று வாகனங்கள் மற்றும் இரண்டு டன் ரேஷன் அரிசியை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கபட்டனர்