sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வால்பாறையில் பனி மூட்டம்

/

வால்பாறையில் பனி மூட்டம்

வால்பாறையில் பனி மூட்டம்

வால்பாறையில் பனி மூட்டம்


ADDED : பிப் 21, 2025 11:09 PM

Google News

ADDED : பிப் 21, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறையில் பருவமழைக்கு பின் தற்போது குளுகுளு சீசன் நிலவுவதால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்திற்கு பின், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், காலை, மாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவுகிறது. பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அதிகாலை நேரத்தில் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றனர். இந்நிலையில், வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில், அதிகாலை நேரத்தில் படரும் பனிமூட்டத்தை சுற்றுலாபயணியர் வெகுவாக கண்டு ரசித்தனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில் மாறிவரும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், எஸ்டேட் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக, யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், காலை நேரத்தில் (7:00 மணி வரை) பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால், எதிரே வரும் வனவிலங்குகள் தொழிலாளர்களின் பார்வைக்கு தெரிவதில்லை. அதனால், காலை, 8:00 மணிக்கு பின் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்ல அந்தந்த எஸ்டேட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us