sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேலை உறுதியளிப்பு திட்ட சிறப்பு கிராம சபை கூட்டம்

/

வேலை உறுதியளிப்பு திட்ட சிறப்பு கிராம சபை கூட்டம்

வேலை உறுதியளிப்பு திட்ட சிறப்பு கிராம சபை கூட்டம்

வேலை உறுதியளிப்பு திட்ட சிறப்பு கிராம சபை கூட்டம்


ADDED : செப் 07, 2024 03:05 AM

Google News

ADDED : செப் 07, 2024 03:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவுக்கு உட்பட்ட கோதவாடி ஊராட்சியில், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று (6ம் தேதி) நடந்தது.

இதில், கோதவாடி ஊராட்சி தலைவர் ரத்தினசாமி, தணிக்கையாளர் கவுஸ்கான், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டம் விவசாயி ராமசாமி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் அதிக அளவு உள்ளனர். ஆனால் ஆட்களுக்கு தகுந்த வேலைகள் இல்லை. மேலும், சிலருக்கு வங்கி கணக்கு வாயிலாக வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல்கள் தெரிவதில்லை.

ஆற்றுப்பகுதி ஓரம் செடிகள் மற்றும் மரங்கள் வளர்த்தல், 'சங்கன்பாண்டு' போன்ற திட்டங்கள் மற்றும் ஊராட்சி எல்லை விரிவு படுத்தினால் பயனாளிகள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் என மக்கள் தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், அனைவருக்கும் வேப்ப மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us