/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்பிறை ஏகாதசி விழா கோவில்களில் சிறப்பு பூஜை
/
வளர்பிறை ஏகாதசி விழா கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : மே 19, 2024 11:06 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், வளர்பிறை ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசியையொட்டி உற்சவ மூர்த்திகளுக்கு பால், இளநீர், தேன், தயிர், திருமஞ்சனப்பொடி, சந்தனம், மஞ்சள், பன்னீர் என பல வகையான அபிேஷகம் நடைபெற்றன.
தொடர்ந்து தாயாருடன் பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை, 11:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது.
பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். இதுபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், வளர்பிறை ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

