sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேகம் காட்டும் மினிபஸ்கள்  அச்சத்தின் பிடியில் பயணியர்

/

வேகம் காட்டும் மினிபஸ்கள்  அச்சத்தின் பிடியில் பயணியர்

வேகம் காட்டும் மினிபஸ்கள்  அச்சத்தின் பிடியில் பயணியர்

வேகம் காட்டும் மினிபஸ்கள்  அச்சத்தின் பிடியில் பயணியர்


ADDED : ஜூலை 02, 2024 02:24 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு பஸ் செல்லாத வழித்தடத்தில், குடியிருப்பு பகுதிகளில் செல்லும் இந்த பஸ்சில், அதிகப்படியான மக்கள் பயணிக்கின்றனர்.

ஆனால், அவ்வப்போது, கலெக் ஷன் வேண்டி, அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு இணையாக, மினிபஸ்கள் அதிவேகமாக இயக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் வேகம் காட்டும் மினி பஸ்களால், வாகனங்களில் செல்வோர் மற்றும் பாத சாரிகள் பாதிக்கின்றனர்.

மேலும், பயணியர் கைகாட்டும் இடங்களில் எல்லாம், திடீரென நிறுத்துவதால், பின்னால் வரும் வாகனங்கள், ஒன்றுடன் ஒன்று மோதும் நிலை ஏற்படுகிறது.

மக்கள் கூறுகையில், 'அதிவேகத்துடன் இயக்கப்படும் மினி பஸ்களால் ரோட்டில் செல்வோர் அச்சப்பட வேண்டியுள்ளது. போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு செய்ய வேண்டும். விதிமீறி இயங்கும் மினி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us