ADDED : ஜூன் 21, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான கபடி போட்டி கலைவாணி மாடல் பள்ளியில் ஜூலை, 7ம் தேதி நடக்கிறது.
மதுக்கரை கலைவாணி மாடல் மெட்ரிக்., பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டியில் பள்ளி அணிகள் பங்கேற்கலாம். பங்கேற்கும் மாணவர்கள் தங்களின் ஆதார் கார்டு மற்றும் பள்ளி போனாபைடு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு 5 அடி கோப்பை, சான்றிதழ், பதக்கம், ரொக்கம் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன. மேலும், முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
பங்கேற்க விரும்பும் பள்ளி அணிகள் ஜூலை, 3ம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும். போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணம் இல்லை.
மேலும் விவரங்களுக்கு 73738 68382.