ADDED : பிப் 24, 2025 09:43 PM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டியில், சாய் அகாடமி சார்பில் மாநில அளவிலான உள்ளரங்கு வில்வித்தை போட்டி நடந்தது.
இப்போட்டியானது, 10, 12, 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவின் கீழ் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
