sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விவசாயிகளுக்கு வழங்க மரக்கன்றுகள் இருப்பு

/

விவசாயிகளுக்கு வழங்க மரக்கன்றுகள் இருப்பு

விவசாயிகளுக்கு வழங்க மரக்கன்றுகள் இருப்பு

விவசாயிகளுக்கு வழங்க மரக்கன்றுகள் இருப்பு


ADDED : செப் 06, 2024 02:41 AM

Google News

ADDED : செப் 06, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை;'மண்ணுயிர் காத்த மன்னுயிர் காப்போம்' திட்டத்தில், வேப்ப மரக்கன்றுகள், இயற்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது,' என ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

ஆனைமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் அறிக்கை:

மண்ணுயிர் காத்த மன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தில், கோட்டூர் துணை விரிவாக்க மையத்தில், 2,915 நாட்டு வேப்ப மரக்கன்றுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.ஆனைமலை வட்டாரத்தில் உள்ள, 19 கிராமத்தை சேர்ந்த இயற்கை ஆர்வல விவசாயிகள், தங்களது நிலங்களின் சுற்றுப்பகுதிகளிலும், காலியிடங்களிலும் நட்டு பராமரிக்க இம்மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

மரக்கன்றுகள் வளர்ப்பதால், நகர கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளின் வெளியேற்றத்தால் காற்றில் ஏற்படும் நச்சு மாசுக்களின் பாதிப்பை தடுக்கிறது.

வேர் அழுகல் பூஞ்சாணம், நுாற்புழுக்களின் பாதிப்பை முற்றிலும் தடுக்கிறது. 20 ரூபாய் மதிப்புள்ள மரக்கன்றுகள், சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடி விவசாயிகள் நட்டு பயன்பெறும் வகையில் நில உடமைக்கு ஏற்றவாறு உதவி இயக்குனரால் ஆய்வு செய்யப்பட்டு, குறைந்த அளவிலேயே பட்டியலிடப்பட்டு ரசீதுடன் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us