sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பவானி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர் குளித்தால் கடும் நடவடிக்கை

/

பவானி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர் குளித்தால் கடும் நடவடிக்கை

பவானி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர் குளித்தால் கடும் நடவடிக்கை

பவானி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர் குளித்தால் கடும் நடவடிக்கை


ADDED : மே 23, 2024 11:12 PM

Google News

ADDED : மே 23, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி குளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேட்டுப்பாளையம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளம், குட்டைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் பவானி ஆற்றில் கலக்கிறது.

மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சிறுமுகை, வழியாக பவானி ஆறு செல்கிறது. பவானி ஆற்றில் பில்லூர் அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பில்லூர் அணைக்கு நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. கடந்த சில நாட்களாக பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 100 அடி கொள்ளளவு கொண்ட அணையின் தற்போதைய நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 94 அடியாக உள்ளது. அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் கூறுகையில், பவானி ஆற்றில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி ஆற்றில் குளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர பவானி ஆற்றின் ஆபத்தான பகுதிகளில் லைப் காட்ஸ் போலீஸ் பிரிவினர் 24 மணி நேரமும் ரோந்து செல்கின்றனர், என்றனர்.-






      Dinamalar
      Follow us