sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும்': தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., அறிவுறுத்தல்

/

'மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும்': தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., அறிவுறுத்தல்

'மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும்': தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., அறிவுறுத்தல்

'மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும்': தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., அறிவுறுத்தல்


ADDED : ஏப் 23, 2024 11:40 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து, விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது.

அனைத்து வகுப்புகளுக்குமான தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ஆன்லைன் வாயிலாக நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(சி.இ.ஓ.,) பாலமுரளி தலைமை வகித்தார். கோவை மாவட்டக் கல்வி அலுவலர் ஜெய்சங்கர், பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் கேசவ்குமார் மற்றும் அனைத்து உயர்நிலை, மேல்நிலை அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், அரசுப் பள்ளிகளின் அருகில் 5ம் வகுப்பு வரை செயல்படும் நர்சரி, பிரைமரி தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளை, 6ம் வகுப்பு முதல் அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.

தொழில் படிப்புகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, அரசு வேலைகளில் 20 சதவீத ஒதுக்கீடு, மாணவர்களுக்கான உதவித் தொகைகள், நான் முதல்வன் திட்டம் ஆகியவை குறித்து பெற்றோர்களுக்கு வீடு வீடாகச் சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us