/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை மழைக்கால பயறு விதைகளுக்கு மானியம்
/
கோடை மழைக்கால பயறு விதைகளுக்கு மானியம்
ADDED : மே 10, 2024 11:11 PM
பொள்ளாச்சி;கோவை மாவட்டத்தில்,கோடை மழைக்காலத்தில், குறைந்த நீர் தேவையுள்ள தானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை மற்றும் எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
கோவையில் இந்த ஆண்டு கோடையில், 3,500 ஏக்கர் பரப்பளவில் தானியங்கள், 800 ஏக்கர் பரப்பளவில் பயறு வகைகள், 2,500 ஏக்கரில் நிலக்கடலை மற்றும் -750 ஏக்கரில் எள் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.
விதைப்புக்கு தேவையான பயறு வகை மற்றும் நிலக்கடலை விதைகளுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், 10 மற்றும் 15 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு, 50 சதவீதம் மானியத்தில் விதைகள், வேளாண்மை விரிவாக்க மையங்கள்வாயிலாகவழங்கப்படுகின்றன.
சான்று பெற்ற விதைகளுடன் கலந்து, விதைக்கத் தேவையான உயிர் பூஞ்சை கொல்லிகளான டிரைகோகிரம்மா விரிடி, சூடோமோனாஸ் புளுரசென்ஸ், திரவ உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, 99449 77561 என்ற மொபைல்போன்எண்ணில் வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம் என, வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.