sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தரமான விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்

/

தரமான விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்

தரமான விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்

தரமான விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்


ADDED : ஜூன் 05, 2024 08:35 PM

Google News

ADDED : ஜூன் 05, 2024 08:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : தரமான விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, கிலோவிற்கு ரூ. 30 உற்பத்தி மானியம் வழங்கப்படும் என, வேளாண் இணை இயக்குனர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார், 26,088 எக்டரில் (64,464.85 ஏக்கர்) சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு நல்ல மகசூல் தரும் வகையில், கோ32 மற்றும் கே12 ரக விதைகளை வழங்க, உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டது.

அதன்படி, கோ32 மற்றும் கே12 ரக விதைகளை உற்பத்தி செய்ய சூலுார், கண்ணம்பாளையம், ஊத்துப்பாளையம், இடிகரை, நடுப்பாளையம், பீடம்பள்ளி, ஒட்டர்பாளையம், ஊஞ்சம்பாளையம், அப்பநாயக்கன்பட்டி, பதுவம்பள்ளி ஆகிய கிராமங்களில், அமைக்கப்பட்ட விதைபண்ணைகளை வேளாண் இணை இயக்குனர் வெங்கடாசலம் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, நுண்ணுாட்டச்சத்து, பயிர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தின் கீழ், ஒரு கிலோவுக்கு ரூ.30 உற்பத்தி மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆய்வின் போது, வேளாண் துணை இயக்குனர் புனிதா, உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்க கோவை மாவட்ட ஆலோசகர் மாரியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us