/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொகுதியை மேம்படுத்திட பா.ஜ.,வை ஆதரியுங்க! வேட்பாளர் வசந்தராஜன் பிரசாரம்
/
தொகுதியை மேம்படுத்திட பா.ஜ.,வை ஆதரியுங்க! வேட்பாளர் வசந்தராஜன் பிரசாரம்
தொகுதியை மேம்படுத்திட பா.ஜ.,வை ஆதரியுங்க! வேட்பாளர் வசந்தராஜன் பிரசாரம்
தொகுதியை மேம்படுத்திட பா.ஜ.,வை ஆதரியுங்க! வேட்பாளர் வசந்தராஜன் பிரசாரம்
ADDED : ஏப் 12, 2024 11:56 PM

- நமது நிருபர் -
பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியிலுள்ள கோவைபுதுார், குளத்துபாளையம், இடையர்பாளையம், ரைஸ்மில் ரோடு, வெற்றிலைக்கார வீதி பகுதிகளில், நேற்று பா.ஜ. வேட்பாளர் வசந்தராஜன் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, வசந்தராஜன் பேசியதாவது:
பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கு இந்த தேர்தல் நடக்கிறது. தி.மு.க., -- அ.தி.மு.க.,வினரிடம் பிரதமர் யார் என கேட்டால், பதில் கிடையாது. கடந்த, 10 ஆண்டு காலமாக ஊழலற்ற இந்தியாவை கொடுத்தவர் பிரதமர் மோடி.
இந்தியா என்றால், ஊழல் நாடு என உலக நாடுகள் துாற்றும். இன்று நாம் உயிரோடு இருக்க காரணம், மோடி இலவசமாக வழங்கிய கொரோனா தடுப்பூசி தான். அது போல், 13 நாட்டு மக்களை காப்பாற்றினார். நிலவின் தென் துருவம், சூரியனுக்கும் விண்கலம் அனுப்பியது நாம் தான்.
ரஷ்யா -- உக்ரைன் போரை நிறுத்தி, 23 ஆயிரம் மாணவர்களை காப்பாற்றியது மோடி. வீடு கட்ட, கழிவறை கட்ட, குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்ததும் மோடிதான். நமக்கு சேர வேண்டிய மானியத்தை, ஊழலின்றி வங்கி கணக்கு வாயிலாக வழங்குகிறார்.
இதையே, தி.மு.க.,-- அ.தி.மு.க., செய்திருந்தால், முக்கால்வாசி பணம் ஸ்டாலினுக்கும், பழனிசாமிக்கும் போயிருக்கும். டிரைவர் இல்லாத பஸ்சில், நாம் ஏறமாட்டோம். அதுபோல் பிரதமர் வேட்பாளர் இல்லாத கட்சிகளுக்கு ஓட்டு போடுவதா?
லோக்சபாவில் மக்கள் பிரச்னையை பேசாமல், டீ, மிக்சர் சாப்பிட சென்றவர்களால் என்ன பயன்? தற்போது, தமிழகத்தில் புரட்சி வந்துள்ளது. பா.ஜ.,விற்கு வாய்ப்பு கொடுங்கள். உங்களுக்காக உழைக்க, குறைகளை கேட்க, கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பு கொடுங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.

