sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொகுதியை மேம்படுத்திட பா.ஜ.,வை ஆதரியுங்க! வேட்பாளர் வசந்தராஜன் பிரசாரம்

/

தொகுதியை மேம்படுத்திட பா.ஜ.,வை ஆதரியுங்க! வேட்பாளர் வசந்தராஜன் பிரசாரம்

தொகுதியை மேம்படுத்திட பா.ஜ.,வை ஆதரியுங்க! வேட்பாளர் வசந்தராஜன் பிரசாரம்

தொகுதியை மேம்படுத்திட பா.ஜ.,வை ஆதரியுங்க! வேட்பாளர் வசந்தராஜன் பிரசாரம்


ADDED : ஏப் 12, 2024 11:56 PM

Google News

ADDED : ஏப் 12, 2024 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியிலுள்ள கோவைபுதுார், குளத்துபாளையம், இடையர்பாளையம், ரைஸ்மில் ரோடு, வெற்றிலைக்கார வீதி பகுதிகளில், நேற்று பா.ஜ. வேட்பாளர் வசந்தராஜன் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, வசந்தராஜன் பேசியதாவது:

பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கு இந்த தேர்தல் நடக்கிறது. தி.மு.க., -- அ.தி.மு.க.,வினரிடம் பிரதமர் யார் என கேட்டால், பதில் கிடையாது. கடந்த, 10 ஆண்டு காலமாக ஊழலற்ற இந்தியாவை கொடுத்தவர் பிரதமர் மோடி.

இந்தியா என்றால், ஊழல் நாடு என உலக நாடுகள் துாற்றும். இன்று நாம் உயிரோடு இருக்க காரணம், மோடி இலவசமாக வழங்கிய கொரோனா தடுப்பூசி தான். அது போல், 13 நாட்டு மக்களை காப்பாற்றினார். நிலவின் தென் துருவம், சூரியனுக்கும் விண்கலம் அனுப்பியது நாம் தான்.

ரஷ்யா -- உக்ரைன் போரை நிறுத்தி, 23 ஆயிரம் மாணவர்களை காப்பாற்றியது மோடி. வீடு கட்ட, கழிவறை கட்ட, குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்ததும் மோடிதான். நமக்கு சேர வேண்டிய மானியத்தை, ஊழலின்றி வங்கி கணக்கு வாயிலாக வழங்குகிறார்.

இதையே, தி.மு.க.,-- அ.தி.மு.க., செய்திருந்தால், முக்கால்வாசி பணம் ஸ்டாலினுக்கும், பழனிசாமிக்கும் போயிருக்கும். டிரைவர் இல்லாத பஸ்சில், நாம் ஏறமாட்டோம். அதுபோல் பிரதமர் வேட்பாளர் இல்லாத கட்சிகளுக்கு ஓட்டு போடுவதா?

லோக்சபாவில் மக்கள் பிரச்னையை பேசாமல், டீ, மிக்சர் சாப்பிட சென்றவர்களால் என்ன பயன்? தற்போது, தமிழகத்தில் புரட்சி வந்துள்ளது. பா.ஜ.,விற்கு வாய்ப்பு கொடுங்கள். உங்களுக்காக உழைக்க, குறைகளை கேட்க, கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பு கொடுங்கள்.

இவ்வாறு, அவர் பேசினார்.

திட்டம் முழுமையாக்குவேன்'

''கனிம வளம் கடத்தலை தடுக்க, போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் மேம்பட, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் முழுமை பெற, குப்பை கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காண, எனக்கு வாய்ப்பளியுங்கள். ஊழலில் கூட்டாக செயல்படும் தி.மு.க., -- அ.தி.மு.க.வை, இத்தேர்தலோடு விரட்டியடிக்க பா.ஜ.,வை ஆதரியுங்கள்,'' என்றார் வசந்தராஜன்.








      Dinamalar
      Follow us