ADDED : மே 29, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அடுத்த லிங்காபுரம் அருகே, காந்தவயல் மேலுாரில், 50க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், வாழை பிரதானமாக பயிர் செய்துள்ளனர். வாழைத்தார்கள் ஏற்றவும், வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்லவும், தினமும் வாகனங்கள் வந்து செல்கின்றன.
ஆனால், காந்தவயல்மேலுார் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. வாகனங்கள் இயக்க மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம், இப்பகுதிக்கு தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.
