/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர் ஆபாச பேச்சு: போக்சோவில் சிக்கினார்
/
ஆசிரியர் ஆபாச பேச்சு: போக்சோவில் சிக்கினார்
ADDED : செப் 07, 2024 12:22 AM

கோவை:
கோவை மாவட்டம், துடியலுார் அருகே அரசு பள்ளியில், 'நம்ம ஊர், நம்ம பள்ளி' என்ற திட்டத்தில் அறிவியல் பாடம் செயல்முறை வகுப்பு எடுப்பதற்காக காரமடை, கன்னார்பாளையத்தைச் சேர்ந்த ஆசிரியர் அய்யாசாமி, 39, வந்தார்.
அவர் வேறு ஒரு வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவி, 'எங்கள் வகுப்புக்கு எப்போது வருவீர்கள்?' என, ஆர்வ மிகுதியால் கேட்டு உள்ளார்.
அதற்கு ஆசிரியர், 'இரவு, 11:00 மணிக்கு வருகிறேன்; பாய் எடுத்து வை' என, ஆபாசமாக பேசி உள்ளார். மாணவி, பள்ளி ஆசிரியர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பெரிய நாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் போலீசார், அய்யாசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.