/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளம்பெண் தற்கொலை ;போலீசார் விசாரணை
/
இளம்பெண் தற்கொலை ;போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 24, 2024 10:42 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, தேவராயபுரத்தை சேர்ந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கிணத்துக்கடவு, தேவராயபுரத்தை சேர்ந்தவர் புஷ்பா, 24. இவர், பிளஸ் 2 முடித்து வீட்டிலேயே இருந்து வந்தார். திருமணம் ஆகவில்லை.
நேற்று முன் தினம் பெற்றோர்கள் வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வேலை முடித்து வீட்டிற்கு வந்த பெற்றோர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், புஷ்பாவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.