sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மருதமலை முருகனுக்கு தி.மு.க.,வினர் நன்றி!

/

மருதமலை முருகனுக்கு தி.மு.க.,வினர் நன்றி!

மருதமலை முருகனுக்கு தி.மு.க.,வினர் நன்றி!

மருதமலை முருகனுக்கு தி.மு.க.,வினர் நன்றி!

2


ADDED : ஜூன் 06, 2024 07:07 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 07:07 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதால், தி.மு.க., அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா மற்றும் வேட்பாளர் ராஜ்குமார் ஆகியோர், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவை லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில், முன்னாள் மேயர் ராஜ்குமாரும், பா.ஜ., சார்பில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும், அ.தி.மு.க., சார்பில், ராமச்சந்திரனும் என மொத்தம், 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நேற்றுமுன்தினம் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார், 1,18,068 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தி.மு.க., அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா மற்றும் வேட்பாளர் ராஜ்குமார் ஆகியோர், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுவாமி தரிசனம் செய்தனர்.

இவர்களுடன், தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். இந்த தேர்தலில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு, வேட்பாளர் ராஜ்குமார், மருதமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, பிரசாரத்தை துவங்கி, அதன்பின்பே வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us