sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லாரியால் உடைந்த மின்கம்பங்கள் ஒயரை இழுத்துச்சென்றதால் பாதிப்பு

/

லாரியால் உடைந்த மின்கம்பங்கள் ஒயரை இழுத்துச்சென்றதால் பாதிப்பு

லாரியால் உடைந்த மின்கம்பங்கள் ஒயரை இழுத்துச்சென்றதால் பாதிப்பு

லாரியால் உடைந்த மின்கம்பங்கள் ஒயரை இழுத்துச்சென்றதால் பாதிப்பு


ADDED : மே 23, 2024 11:23 PM

Google News

ADDED : மே 23, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே மின் ஒயரை, டிப்பர் லாரி இழுத்துச் சென்றதில் மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதி போக்குவரத்து நிறைந்த சாலையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று காலை பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், டிப்பர் லாரி சென்று கொண்டு இருந்தது. ஊஞ்சவேலாம்பட்டி அருகே டிப்பர் லாரி, மின் ஒயர் சிக்கி இழுத்துச் சென்றது.

அதில், ரோட்டோரம் இருந்த மின்கம்பம் சேதமடைந்து இரண்டாக உடைந்து விழுந்தது; எதிர்புறம் இருந்த மின்கம்பமும் சேதமடைந்தது.

மின்சாரம் சென்று கொண்டு இருந்த சூழலில், இந்த விபத்து நடைபெற்றாலும், அவ்வழியாக யாரும் செல்லாத நிலையில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த, இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

இது குறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள், மின் இணைப்பை துண்டித்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் வேகமாக பரவியதால், பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us