sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மேற்கு புறவழிச்சாலை பணிக்காக தோண்டிய குழியில் வாலிபர் பலி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காததால் விபரீதம்

/

மேற்கு புறவழிச்சாலை பணிக்காக தோண்டிய குழியில் வாலிபர் பலி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காததால் விபரீதம்

மேற்கு புறவழிச்சாலை பணிக்காக தோண்டிய குழியில் வாலிபர் பலி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காததால் விபரீதம்

மேற்கு புறவழிச்சாலை பணிக்காக தோண்டிய குழியில் வாலிபர் பலி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காததால் விபரீதம்


ADDED : ஆக 25, 2024 10:47 PM

Google News

ADDED : ஆக 25, 2024 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்:செல்லப்பகவுண்டன்புதூர், சிறுவாணி மெயின்ரோட்டில், மேற்கு புறவழிச்சாலை பணிக்காக, தோண்டப்பட்ட குழியில், தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.

தேவராயபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக்,37; திருமணமானவர். தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, பணி முடித்து விட்டு, தனது பைக்கில் ஹெல்மெட் அணிந்து, சிறுவாணி மெயின் ரோடு வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

செல்லப்பகவுண்டன்புதூர் பிரிவு, சிறுவாணி மெயின்ரோட்டில், மேற்கு புறவழிச்சாலை பணிக்காக, சிறுவாணி மெயின் ரோட்டின் நடுவே குழி தோண்டப்பட்டுள்ளது.

இக்குழியின், இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைத்து வாகனங்கள் சென்று வருகின்றன. குழி தோண்டப்பட்ட இடத்தில், போதிய தெருவிளக்குகள் இல்லை.

அதோடு, குழி தோண்டப்பட்டுள்ள பகுதியில், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை, ஒப்பந்த நிறுவனம் மேற்கொள்ளவில்லை. இதனால் கார்த்திக், பைக்குடன் சுமார், 16 அடி ஆழமுள்ள குழியில் விழுந்தார்.

ஹெல்மெட் கழன்று, முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பேரூர் போலீசார், இன்ப்ரா எனும் ஒப்பந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று விபத்து நடந்தபின், குழி தோண்டப்பட்ட இடத்தை சுற்றிலும், மண் கொட்டினர். இதை முன்பே செய்திருந்தால், உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.






      Dinamalar
      Follow us