sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆண்டு முழுவதும் குரங்கு அலப்பறை பிடிக்காமல் உறங்குகிறது வனத்துறை

/

ஆண்டு முழுவதும் குரங்கு அலப்பறை பிடிக்காமல் உறங்குகிறது வனத்துறை

ஆண்டு முழுவதும் குரங்கு அலப்பறை பிடிக்காமல் உறங்குகிறது வனத்துறை

ஆண்டு முழுவதும் குரங்கு அலப்பறை பிடிக்காமல் உறங்குகிறது வனத்துறை


ADDED : ஜூன் 05, 2024 12:15 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்:சின்னியம்பாளையம் ஊராட்சியில் ஒரு ஆண்டாக திரியும் குரங்கால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது, சின்னியம்பாளையம் ஊராட்சி. இங்குள்ள ஆசிரியர் நகர் பகுதியில், கடந்த ஓராண்டாக சுற்றித்திரியும் குரங்கால், குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பல முறை புகார் தெரிவித்தும், வனத்துறையினர் குரங்கை பிடிக்க, நடவடிக்கை எடுக்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:

எங்கள் பகுதியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் எங்கள் பகுதிக்கு ஒரு குரங்கு வந்தது. அன்று முதல் எங்களுக்கு பிரச்னைதான்.

வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை தின்று விடுகிறது. ரோட்டில் செல்வோரையும், குழந்தைகளையும் கடிக்க வருகிறது. மின் வயர்களை நாசப்படுத்தி விடுகிறது.

சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை பாழாக்கி விடுகிறது. பலமுறை பிடிக்க முயற்சி செய்தும் குரங்கு சிக்கவில்லை. வனத்துறையினரிடம் போனிலும், நேரடியாகவும் புகார் தெரிவித்தோம்.

ஓரிரு முறை வந்து பார்த்தார்கள். குரங்கை கண்டுபிடிக்க முடியவில்லை என, கூறி சென்றுவிட்டனர். குரங்கின் தொந்தரவால் எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஓராண்டாகியும், குரங்கை பிடிக்காமல் வனத்துறையினர் அலட்சியமாக உள்ளனர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us