/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெயிலால் வெப்பம் ஏறுது; பட்டுக்கூடு விலை உயருது
/
வெயிலால் வெப்பம் ஏறுது; பட்டுக்கூடு விலை உயருது
ADDED : மார் 04, 2025 06:09 AM
- நமது நிருபர் -
வெயில் காலம் துவங்கியதால், பட்டுக்கூடுக்கு உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துள்ளது.
கோவை பாலசுந்தரம் ரோட்டில், பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, உடுமலை, திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து, விற்பனை செய்து வருகின்றனர்.
கோவை பட்டு அங்காடிக்கு மாதம், 20 முதல் 25 டன் வரை பட்டுக்கூடு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பனிக்காலம் முடிந்து,வெயில் காலம் துவங்கி இருப்பதால், பட்டுக்கூடு உற்பத்தி குறைந்துள்ளது.
இதனால், பட்டு நுாலுக்கு டிமாண்ட் அதிகரித்து, பட்டுக்கூடு விலை உயர்ந்துள்ளது.இந்த வாரம், தரமான கூடு ஒரு கிலோ, 650 ரூபாய்க்கும், அடுத்த தரம், 590 ரூபாய்க்கும் விற்பனையாகி உள்ளது. சராசரியாக விலை 623 ரூபாயாக உள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'கடந்த 20 நாட்களாக வெயில் கடுமையாக உள்ளது. வெயில் காலத்தில் பட்டுக்கூடு உற்பத்தி, எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும். பராமரிப்பு செலவு அதிகரிக்கும். இருந்தும், கூட்டுக்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை,' என்றனர்.