sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவிலில் திருட முயன்றவர் பொதுமக்கள் தாக்கியதில் பலி

/

கோவிலில் திருட முயன்றவர் பொதுமக்கள் தாக்கியதில் பலி

கோவிலில் திருட முயன்றவர் பொதுமக்கள் தாக்கியதில் பலி

கோவிலில் திருட முயன்றவர் பொதுமக்கள் தாக்கியதில் பலி


ADDED : ஜூன் 08, 2024 01:53 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்:கோவை சூலுார் அடுத்த நடுப்பாளையத்தில் மாகாளியம்மன் கோவிலுக்குள், கடந்த 6ம் தேதி நள்ளிரவு நுழைந்த மர்ம நபர் உண்டியலை உடைக்க முயன்றார். அப்போது, அலாரம் அடித்தது. ஊரின் முக்கியமானவர்களுக்கு மொபைல் போன் அலாரமும் அடித்தது. இதனால், உஷாரான பொதுமக்கள், கோவில் முன் திரண்டனர். உண்டியலை உடைக்க முயன்ற நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அந்த நபர் கோவை கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த அப்துல் சலாம் மகன் சமீர், 27, என்பது தெரிந்தது. அவர் மீது போத்தனுார், சூலுார் ஸ்டேஷன்களில் திருட்டு மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை சமீர் உயிரிழந்தார்.

இதையடுத்து, சூலுார் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் நடுப்பாளையத்தை சேர்ந்த கனகராஜ், 40, துரைமுருகன், 37, பழனிவேல், 51, உள்ளிட்ட ஐந்து பேர், சமீரை தாக்கியது தெரிந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மூவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கதிர்வேல், சந்துருவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us