sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தெருவிளக்குகள் எரியாததால் எஸ்டேட் பகுதி மக்கள் அச்சம்

/

தெருவிளக்குகள் எரியாததால் எஸ்டேட் பகுதி மக்கள் அச்சம்

தெருவிளக்குகள் எரியாததால் எஸ்டேட் பகுதி மக்கள் அச்சம்

தெருவிளக்குகள் எரியாததால் எஸ்டேட் பகுதி மக்கள் அச்சம்


ADDED : செப் 17, 2024 10:04 PM

Google News

ADDED : செப் 17, 2024 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறை நகரில் ஐந்து உயர்கோபுர மின்விளக்கும், முடீஸ், சோலையார்பஜார், கவர்க்கல், வாட்டர்பால்ஸ், அட்டகட்டி, ரொட்டிக்கடை பகுதிகளில் மினி உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தவிர, வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், 2,936 தெருவிளக்குகள் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில், இரவு நேரத்தில் யானை, காட்டுமாடு, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் முகாமிடுகின்றன.

இரவு நேரங்களில், பெரும்பாலான எஸ்டேட் பகுதியில் தெருவிளக்குகள் எரியாததால், தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.

தொழிலாளர்கள் கூறியதாவது:

வால்பாறை நகராட்சி சார்பில், நகர் பகுதியில் மட்டுமே அதிக அளவு வளர்ச்சிப்பணிகள் நடக்கிறது. நகராட்சி நிர்வாகம் சார்பில், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தர தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக தெருவிளக்கு வசதி கூட முறையாக செய்யப்படவில்லை.

இதனால், இரவு நேரத்தில் காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது கூட தெரியாத நிலையில், உயிருக்கு பயந்து வாழ வேண்டியுள்ளது. எஸ்டேட் பகுதியில் பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக சீரமைத்து, தேவையான இடங்களில் கூடுதலாக மினி உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us