/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுலா துறையினருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது தமிழக அரசு
/
சுற்றுலா துறையினருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது தமிழக அரசு
சுற்றுலா துறையினருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது தமிழக அரசு
சுற்றுலா துறையினருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது தமிழக அரசு
ADDED : ஆக 17, 2024 11:50 PM
கோவை:உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு, சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா தொழிலில் ஈடுபடுவோர்க்கான, தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
இந்த விருதுகள் சுற்றுலாத்தொழிலில் ஈடுபடுவோரையும், தமிழகத்தில் சுற்றுலா தொடர்புடைய தொழிலில் ஈடுபடுவோரையும் சுற்றுலா பயண முகவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் வழங்கப்படுகிறது.
சுற்றுலாஅழைத்து செல்பவர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சாகச சுற்றுலா, சுற்றுலா தொடர்பான கல்வி நிறுவனங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர், சிறந்த சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்போன்ற, 17 வகையான சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்திலுள்ள, அனைத்து சுற்றுலாத் தொழில் சார்ந்தவர்களும், சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்விருது, உலக சுற்றுலா தினமான செப்.,27 அன்று சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.
விண்ணப்பங்களை, www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் கூறியிருக்கிறார்.

