sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இரு விதமான உத்தரவால் ஆசிரியர்கள் குழப்பம் ;தேர்தல் பிரிவினர் விளக்கம் கேட்டதால் அதிர்ச்சி

/

இரு விதமான உத்தரவால் ஆசிரியர்கள் குழப்பம் ;தேர்தல் பிரிவினர் விளக்கம் கேட்டதால் அதிர்ச்சி

இரு விதமான உத்தரவால் ஆசிரியர்கள் குழப்பம் ;தேர்தல் பிரிவினர் விளக்கம் கேட்டதால் அதிர்ச்சி

இரு விதமான உத்தரவால் ஆசிரியர்கள் குழப்பம் ;தேர்தல் பிரிவினர் விளக்கம் கேட்டதால் அதிர்ச்சி

1


ADDED : மார் 29, 2024 01:35 AM

Google News

ADDED : மார் 29, 2024 01:35 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;பொள்ளாச்சி தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், பொள்ளாச்சியில் நடந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்காததற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சமீபத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் பணிபுரிய உள்ள ஆசிரியர்கள், பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் கல்லுாரியில் நடந்த பயிற்சியில் பங்கேற்க, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டு, கடிதம் அனுப்பியிருக்கிறார். இவர்களே, உடுமலையில் நடக்கும் பயிற்சியிலும் பங்கேற்க உத்தரவிட்டு, திருப்பூர் கலெக்டர் கடிதம் அனுப்பியிருக்கிறார். பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள், தங்களின் வசதிக்கேற்ப பங்கேற்றுள்ளனர். உடுமலைக்கு சென்றவர்கள், பொள்ளாச்சியில் நடந்த பயிற்சியில் பங்கேற்கவில்லை.

இதில், பொள்ளாச்சியில் நடந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்காதவர்களுக்கு விளக்கம் கேட்டு, தேர்தல் பிரிவினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். இவர்களிடம் பயிற்சியில் பங்கேற்காததற்கான காரணம் கேட்கப்பட்டது. அதற்கு, 'உடுமலையில் நடந்த பயிற்சியில் பங்கேற்றோம்' என, ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதையே எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுங்கள் என அறிவுறுத்தியதை தொடர்ந்து, ஆசிரியர்கள் எழுதிக் கொடுத்துச் சென்றனர்.

ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'கோவை மாவட்ட தேர்தல் பிரிவில் இருந்து, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவில் இருந்தும் இரு கடிதங்கள் வந்தன. நாங்கள் உடுமலையில் நடந்த பயிற்சியில் பங்கேற்றோம்.

பொள்ளாச்சியில் ஏன் பங்கேற்கவில்லை என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர். ஒரே நபருக்கு இரு மாவட்ட நிர்வாகங்கள் கடிதம் அனுப்பியது தவறு. அதை சரி செய்யாமல், எங்களை அலைக்கழித்து விளக்கம் கேட்கின்றனர்' என்றனர்.






      Dinamalar
      Follow us