/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருட முயன்றவர் கொலை :ஜாமின் கோரி மூவர் மனு
/
திருட முயன்றவர் கொலை :ஜாமின் கோரி மூவர் மனு
ADDED : ஜூலை 12, 2024 10:45 PM
கோவை:மருத்துவமனையில் திருட முயன்றவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பேர் ஜாமின்மனு தாக்கல் செய்தனர்.
கோவை, காந்தி மாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜன்,38. கூலி தொழிலாளியான இவர், கடந்த மாதம் 27 ம் தேதி, சித்ரா பகுதியிலுள்ள தனியார் மருத்துவ மனை வளாகத்திற்குள் இரும்பு பொருட்களை திருட முயன்ற போது, அடித்துகொலை செய்யப்பட்டார். பீளமேடு போலீசார் விசாரித்து, மருத்துவமனை துணை தலைவர் நாராயணன், மேலாளர் ரமேஷ், சரவணகுமார், பி.ஆர்.ஓ சசிகுமார், பிளம்பர் சுரேஷ் , சரவணகுமார், காவலாளி மணிகண்டன் , சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களில் சரவணகுமார், சதீஷ்குமார், மணிகண்டன் ஆகியோர், ஜாமினில் விடுவிக்க கோரி மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான உத்தரவு, வரும் 16 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.