/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் - வழிகாட்டி' கோவையில் நாளை துவக்கம்: உயர்கல்வி குழப்பங்களுக்கு ஒரு கூரையின் கீழ் தீர்வு
/
'தினமலர் - வழிகாட்டி' கோவையில் நாளை துவக்கம்: உயர்கல்வி குழப்பங்களுக்கு ஒரு கூரையின் கீழ் தீர்வு
'தினமலர் - வழிகாட்டி' கோவையில் நாளை துவக்கம்: உயர்கல்வி குழப்பங்களுக்கு ஒரு கூரையின் கீழ் தீர்வு
'தினமலர் - வழிகாட்டி' கோவையில் நாளை துவக்கம்: உயர்கல்வி குழப்பங்களுக்கு ஒரு கூரையின் கீழ் தீர்வு
ADDED : மார் 22, 2024 01:20 AM

கோவை;பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் போன்ற பல்வேறு கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் ஒரே கூரையின் கீழ் தீர்வு அளிக்கும், 'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சி, கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில், நாளை துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.
'தினமலர்' நாளிதழ் சார்பில், உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, 'தினமலர்' மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக்குழுமங்கள் இணைந்து நடத்துகின்றன. ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், அமிர்தா விஷ்வ வித்யாபீடம்முக்கிய பங்களிப்பாளர்களாகவும், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி, ஸ்ரீ சக்தி பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி இணை ஸ்பான்சர்களாகவும்,கற்பகம் கல்வி நிறுவனம், எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, கே.எம்.சி.எச்., என்.ஜி.பி கல்வி நிறுவனங்கள், சேரன் கல்விக்குழுமம்,இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம், ரத்தினம் கல்விக்குழுமம், ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லுாரி, ஸ்பான்சர்களாகவும் 'தினமலர்' நாளிதழுடன் கரம் கோர்கின்றனர்.
கண்காட்சி, கருத்தரங்கு
காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணிவரை கண்காட்சி மற்றும் கருத்தரங்கு என்ற இரு பிரிவுகளாக நிகழ்ச்சிநடக்கிறது. 130 முன்னணி கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் அமையவுள்ளன. இதன் வாயிலாக, ஒரே கூரையின் கீழ், கல்லுாரிகளில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள், சேர்க்கை விபரங்கள், கட்டணம், விடுதி வசதி உள்ளிட்ட அனைத்தும் தெரிந்து கொள்ளலாம். கருத்தரங்கில் அனைத்து துறை வல்லுநர்களும் பங்கேற்று விளக்கமளிக்கவுள்ளனர்.
கருத்தரங்கில், 'நீங்களும் சாதனையாளர் ஆகலாம்' என்ற தலைப்பில் ஐ.பி.எஸ்., ரவி,'வேளாண் படிப்புகளும் வாய்ப்புகளும்' என்ற தலைப்பில், தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, 'ஜே.இ.இ., தேர்வுகளில் சாதிக்க டிப்ஸ்' குறித்து, கல்வியாளர் நெடுஞ்செழியன், 'கரியர் கவுன்சிலிங்' குறித்து கல்வியாளர் அஸ்வின், 'வேலைவாய்ப்பு திறன்' குறித்து ஜோஹோநிறுவன அதிகாரிசார்லஸ் காட்வின்,'சி.ஏ., படிப்புகள் எதிர்காலம்' குறித்து, ராஜேந்திரகுமார், 'எலக்ட்ரானிக்ஸ் வாகனங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ்' குறித்து செந்தில்குமார்ஆகியோர் பேசவுள்ளனர்.
அரிய தகவல்கள்
இதை தவிர்த்து, பொறியியல், மருத்துவம், நுழைவுத்தேர்வுகள், கவுன்சிலிங் நடைமுறை, தொழில் முனைவோர் வாய்ப்பு, வேலைவாய்ப்பை உருவாக்கவுள்ள டாப் துறைகள், வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் உட்பட பல்வேறு துறைகள் குறித்து, வல்லுநர்கள் விளக்கமளிக்கவுள்ளனர்.
மேலும், ட்ரோன் இயக்கம், ஏ.ஐ., எம்.எல்., ஐ.ஓ.டி., பிளாக்சைன், டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி உள்ளிட்டபாடப்பிரிவுகளின் எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் வல்லுநர்கள் பேசவுள்ளனர்.
பிளஸ் 2 மட்டுமின்றி, பிளஸ் 1 மாணவர்களும் இதில் பங்கேற்று அரிய தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.
பரிசுகள் ஏராளம்
கருத்தரங்கில் கேட்கப்படும் எளிய கேள்விகளுக்கு மாணவர்கள்விடையளித்து,லேப்டாப், டேப்லெட், வாட்ச் போன்ற பரிசுகளையும் தட்டிச்செல்லலாம்.
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் www.kalvimalar.com என்ற இணையதளத்திலோ அல்லது 91505-74441 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலோ பதிவு செய்துகொள்ளலாம்.
இலவச பஸ் வசதி
அவிநாசி சாலையில் இருந்து கொடிசியா வளாகத்திற்கு, இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; அனுமதி இலவசம்.

