sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தோப்பில் பாசி நுாற்றாண்டு விழா பாலக்காட்டில் 28ல் நடக்கிறது

/

தோப்பில் பாசி நுாற்றாண்டு விழா பாலக்காட்டில் 28ல் நடக்கிறது

தோப்பில் பாசி நுாற்றாண்டு விழா பாலக்காட்டில் 28ல் நடக்கிறது

தோப்பில் பாசி நுாற்றாண்டு விழா பாலக்காட்டில் 28ல் நடக்கிறது


ADDED : ஜூலை 22, 2024 02:54 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு;தோப்பில் பாசி நுாற்றாண்டு விழா, வரும் 28ம் தேதி பாலக்காட்டில் நடைபெறுகிறது.

மலையாள நாடக அரங்கிற்கும், திரைப்பட துறைக்கும், அரசியல் மற்றும் சமூகத்திற்கும் மறக்க முடியாத பங்களிப்பை வழங்கியவர் தோப்பில் பாசி. மறைந்த அவரது பிறந்த நுாற்றாண்டு விழா வரும் 28ம் தேதி பாலக்காட்டில் கொண்டாடப்படுகிறது.

கேரளா சங்கீத நாடக அகாடமி, ஸ்வரலயா, பாலக்காடு மாவட்டம் பொது நூலகம், முற்போக்கு கலை சாகித்திய சங்கம், யுவ கலை இலக்கிய குழு ஆகியவை ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

பாலக்காடு செம்பை நினைவு அரசு சங்கீத கல்லுாரில், அன்று காலை, 10:00 மணிக்கு முன்னாள் கலாசார துறை அமைச்சர் பேபி விழாவை துவக்கி வைக்கிறார். ஸ்வரலயா தலைவர் கிருஷ்ணதாஸ் தலைமை வகிக்கிறார்.

தொடர்ந்து 'தோப்பில் பாசியும் நாடகமும்', 'தோப்பில் பாசி என்ற திரைப்பட தயாரிப்பாளர்' ஆகிய இரு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெறும். மாலை, 5:00 மணிக்கு விழா நிறைவு பெறும்.

நிறைவு விழாவை, முன்னாள் வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வம் துவக்கி வைப்பார். சிறப்பு விருந்தினராக ஊராட்சி -கலால் துறை அமைச்சர் ராஜேஷ் பங்கேற்கின்றார்.

தொடர்ந்து பாலக்காடு நாடக கலைஞர்களின் 'கனல் வழிகளிலுாடை' என்ற தலைப்பில் தோப்பில் பாசியின் சிறந்த நாடகங்களில் உள்ள முக்கிய பகுதிகளை கொண்ட நாடகம் அரங்கேறும்.






      Dinamalar
      Follow us