sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

த.மு.எ.ச., நடத்துகிறது கலை இரவு நிகழ்ச்சி

/

த.மு.எ.ச., நடத்துகிறது கலை இரவு நிகழ்ச்சி

த.மு.எ.ச., நடத்துகிறது கலை இரவு நிகழ்ச்சி

த.மு.எ.ச., நடத்துகிறது கலை இரவு நிகழ்ச்சி


ADDED : பிப் 21, 2025 11:15 PM

Google News

ADDED : பிப் 21, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்; அன்னூரில் இன்றும், நாளையும், (22, 23) மக்கள் ஒற்றுமை கலை இரவு நிகழ்ச்சி நடக்கிறது.

இன்று (22ம் தேதி) மாலை 6:00 மணிக்கு, புதுகை பூபாளம் கலைக்குழுவின், நையாண்டி தர்பார் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து சேலம் தமிழ் தர்ஷனா வின் இரட்டை அம்மன் நடனமும், மதுரை நாராயணனின் மரக்கால் ஆட்டமும், கரூர் துர்காவின் மாறுபட்ட நடனங்களும் இரவு 11:00 மணி வரை நடைபெறுகிறது.

வரும் 23ம் தேதி மாலை 6:00 மணிக்கு, விழுப்புரம் மல்லன் பயிற்சி மையத்தின், மல்லர் கம்பம் வீரகலை நிகழ்ச்சியும், இதையடுத்து மதுரை விஜய தர்சினியின் சிலம்பாட்டமும், நிமிர்வுகள் கலைக்குழுவின் பறையாட்டமும், கர்நாடக மலைவாழ் மக்களின் 'டொல்லு குனித்தா' கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.

கவிஞர் லட்சுமி காந்தன் பேசுகிறார். ஏற்பாடுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் ஏற்பாடு செய்து வருகின்றன.






      Dinamalar
      Follow us