sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகரில் இன்றைய நிகழ்வுகள் 

/

மாநகரில் இன்றைய நிகழ்வுகள் 

மாநகரில் இன்றைய நிகழ்வுகள் 

மாநகரில் இன்றைய நிகழ்வுகள் 


ADDED : ஆக 22, 2024 11:56 PM

Google News

ADDED : ஆக 22, 2024 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கதிர்வீச்சு தொழில்நுட்பங்கள்

இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரியின், இ.சி.இ., துறை சார்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு இன்று துவங்கவுள்ளது. இதில், ரேடியேசன் தொழில்நுட்பம் அதன் சவால்கள், வாய்ப்புகள் குறித்து வல்லுநர்கள் விளக்கமளிக்கவுள்ளனர். காலை, 9:30 மணிக்கு நிகழ்வுகள் துவங்கவுள்ளன.

புத்தக திருவிழா

தொழில்நுட்பங்கள் ஆயிரம் வரினும், வாசிப்பை நேசிப்பவர்களுக்கு என்றுமே வானம் வசப்படும். வாசிப்பை அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மேட்டுப்பாளையம் 4வது புத்தகத்திருவிழா இன்று துவங்குகிறது. இ.எம்.எஸ்., திருமண மண்டபத்தில், காலை, 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. இத்திருவிழா, வரும் செப்., 1 வரை நடப்பதால், அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

திருகல்யாண வைபவம்

தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் ஆடி பெருந்திருவிழாவின் ஒரு பகுதியாக, இன்று திருகல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. மாலை, 6:00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு, 7:00 மணிக்கு திருகல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. இரவு, 8:30 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

நன்னீராட்டு பெருவிழா

காரமடை பெள்ளாதி கிராமம் சங்கமேஸ்வரர் திருகோவில் நன்னீராட்டு பெருவிழா இன்று, காலை, 9:15 மணி முதல் 9:45 மணி முதல் நடைபெறவுள்ளது.

குன்னத்துார் ஸ்ரீ பழனிஆண்டவர் திருக்குட நன்னீராட்டு பெருவிழா, இன்று காலை, 6:00 -7:30 மணிக்குள் நடைபெறுகிறது. காலை, 10:00 மணியளவில், சண்முகம் குழுவினரின் பஜனை நடக்கவுள்ளது.

தேசிய கருத்தரங்கு

இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரியில், ஏ.ஐ., தொழில்நுட்ப பயன்பாட்டில், வேளாண் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான கருத்தரங்கு இன்று நடக்கிறது. கருத்தரங்கு, காலை, 11:00 மணி முதல் 12:30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில், வெளிநாட்டு கல்விநிறுவனங்களுடன் இணைந்து, பன்னாட்டு கருத்தரங்கை நடத்துகிறது. இக்கருத்தரங்கு, காலை, 10:00 மணியளவில் கல்லுாரி அரங்கில் துவங்குகிறது.






      Dinamalar
      Follow us