sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆக்ரோஷமான காட்டு யானைகள் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணியர்

/

ஆக்ரோஷமான காட்டு யானைகள் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணியர்

ஆக்ரோஷமான காட்டு யானைகள் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணியர்

ஆக்ரோஷமான காட்டு யானைகள் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணியர்


ADDED : மார் 11, 2025 09:38 PM

Google News

ADDED : மார் 11, 2025 09:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை, ; காட்டு யானைகள் ஆக்ரோஷமடைந்து, ரோட்டை கடந்து சென்றதை கண்டு, சுற்றுலா பயணியர் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களிலும், நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.

இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள மாணிக்கா எஸ்டேட், இடைச்சோலையில் பகல் நேரத்தில் கூட்டமாக சென்ற ஏழு யானைகள், நெடுஞ்சாலைத்துறை ரோட்டை கடக்க முயன்றன.

அப்போது, அந்த வழியாக வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணியர் ஹாரனை சப்தமாக ஒலிக்க செய்து கூச்சலிட்டனர். இதனால், யானைகள் ஆக்ரோஷமடைந்து, ரோட்டோரத்தில் இருந்த சிறிய மரத்தை முட்டித்தள்ளி பிளிறியது.

இதனால் பயந்து போன சுற்றுலா பயணியர், வாகனங்களை பின்நோக்கி நகர்ந்தினர். வாகனங்களை நோட்டமிட்டவாறு, யானைகள் சிறிது நேரத்திற்கு பின் வனப்பகுதிக்குள் சென்றன.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வால்பாறை எஸ்டேட் பகுதியில் இருக்கும் யானைகள், பகல் நேரத்தில் துண்டு சோலையில் முகாமிடுகின்றன. தண்ணீர் குடிக்க அடிக்கடி ரோட்டை கடக்கின்றன. யானைகள் ரோட்டை கடக்கும் போது, அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை பின் நோக்கி நகர்த்தி, அமைதி காக்க வேண்டும்.

யானைகள் ரோட்டை கடந்த பின், தங்களது வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ரோட்டிலோ, தேயிலை காட்டிலோ முகாமிடும் யானைகளை சுற்றுலா பயணியர் தொந்தரவு செய்யக்கூடாது.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us