/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து நெரிசல்; மக்கள் அதிருப்தி சென்டர் மீடியன் அமைக்க கோரிக்கை
/
போக்குவரத்து நெரிசல்; மக்கள் அதிருப்தி சென்டர் மீடியன் அமைக்க கோரிக்கை
போக்குவரத்து நெரிசல்; மக்கள் அதிருப்தி சென்டர் மீடியன் அமைக்க கோரிக்கை
போக்குவரத்து நெரிசல்; மக்கள் அதிருப்தி சென்டர் மீடியன் அமைக்க கோரிக்கை
ADDED : செப் 10, 2024 02:20 AM

வால்பாறை:வால்பாறையில், அடிக்கடி நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகமுள்ளது. இதனால், ரோட்டின் இருபுறமும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி, ரோட்டோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துக்களும் நடக்கிறது.
இதனால், வால்பாறை மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் செல்லும் வழி, வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை ஆகிய இடங்களில், ரோட்டை ஆக்கிரமித்து அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால், வால்பாறை நகரில் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'சுற்றுலா பகுதியான, வால்பாறையில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக உள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், வால்பாறை போஸ்ட் ஆபீஸ் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் 'சென்டர் மீடியன்' அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து, பொதுவான இடத்தில் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.