/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் முன் போக்குவரத்து நெரிசல்
/
மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் முன் போக்குவரத்து நெரிசல்
மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் முன் போக்குவரத்து நெரிசல்
மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் முன் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 26, 2024 09:33 PM
உடுமலை : மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல், வெளியூர் பஸ்கள் ரோட்டில் நின்று செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை, மடத்துக்குளம் நகரங்கள் அமைந்துள்ளன. இதில், திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில், மடத்துக்குளம் நகரம் உள்ளது.
மடத்துக்குளத்தில் பேரூராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் நிற்பதற்கான இடமும் உள்ளது. பல்வேறு நகரங்களிலிருந்து மடத்துக்குளம் வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளியூர், பஸ்கள் செல்கின்றன.
அவை பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல், வெளியே ரோட்டிலேயே நின்று பயணியரை ஏற்றி, இறக்கிச்செல்கின்றன. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் திணற வேண்டியதுள்ளது. அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சில சமயங்களில் சிறிய விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால், மக்கள் ரோட்டை கடக்கவே அச்சப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூர் பஸ்கள் சென்று திரும்ப வேண்டும் என, பொதுமக்கள் பல முறை போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
எனவே, நெரிசலை தடுக்கும் வகையில், அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.