/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் தொழில் நுட்பங்கள்; வேளாண் மாணவர்களுக்கு பயிற்சி
/
தென்னையில் தொழில் நுட்பங்கள்; வேளாண் மாணவர்களுக்கு பயிற்சி
தென்னையில் தொழில் நுட்பங்கள்; வேளாண் மாணவர்களுக்கு பயிற்சி
தென்னையில் தொழில் நுட்பங்கள்; வேளாண் மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : மார் 24, 2024 08:24 PM

உடுமலை;உடுமலை, தளி, திருமூர்த்திநகரிலுள்ள மத்திய, தென்னை வளர்ச்சி வாரியம், தென்னை மகத்துவ மையத்தில், தென்னை சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் தென்னை மதிப்பு கூட்டல் குறித்து வேளாண் பல்கலை மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
உடுமலை, தளி, திருமூர்த்திநகரிலுள்ள மத்திய, தென்னை வளர்ச்சி வாரியம், தென்னை மகத்துவ மையத்தில், கோவை வேளாண் பல்கலை, இளங்கலை வேளாண் வணிக மேலாண்மை, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்கப்பட்டது.
தென்னை வளர்ச்சி வாரியத்தின் உதவி இயக்குனர் ரகோத்துமன், தளி மகத்துவ மையத்தின் நோக்கம், செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் தென்னை தொழில்நுட்ப இயக்கத்தின் வாயிலாக, தென்னை சார்ந்த தொழில்முனைவோருக்கான திட்டங்கள் குறித்து விளக்கினார்.
மேலும், சர்வதேச, இந்தியா மற்றும் தமிழக அளவில் தென்னை பயிரின் இன்றைய நிலை, தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, அறுவடை பின்செய் நேர்த்தி, மதிப்புக்கூட்டல், சந்தைப் படுத்துதல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார். மேலும்,தென்னை உயர் சாகுபடி தொழில் நுட்பங்களும் செயல்முறை விளக்கமும், தென்னையில் மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி, தென்னை உயிர் உரங்கள், ஒட்டுண்ணிகள், இரைவிழுங்கிகள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சிகொல்லிகள், விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப்பொறி ஆகியவை இடம் பெற்ற கண்காட்சி வாயிலாக மாணவர் களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

